Dinesh Gunawardena
இலங்கைஅரசியல்செய்திகள்

பதில் சொல்ல பயமா? ஊடகவியலாளர்களின் கேள்வியால் கல்வியமைச்சர் சீற்றம்!

Share

சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்த்தன சீற்றமடைந்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த சுசில் பிரேமஜயந்த போன்ற சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தால் அரசாங்கத்தினால் தொடர்ந்து இயங்க முடியமா என செய்தியாளர்கள் கல்வியமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களின் இக் கேள்விக்கு சீற்றமடைந்த கல்வியமைச்சர், கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

இருப்பினும் செய்தியாளர்கள் கருத்து தெரிவிக்க அச்சமா என கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். இதனால் அமைச்சர் சீற்றமடைந்தார்.

பிரேமஜயந்த பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரேமஜயந்தவின் அமைச்சில் கல்வியமைச்சர் அவரை சந்தித்தார். கல்வியமைச்சர் சந்திப்பு முடிவடைந்து வெளியேறிய போதே இக் கேள்விகளை ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...