பிரபல அமைச்சின் ஆலோசகரின் மோசமான செயல்
இலங்கைசெய்திகள்

பிரபல அமைச்சின் ஆலோசகரின் மோசமான செயல்

Share

பிரபல அமைச்சின் ஆலோசகரின் மோசமான செயல்

அரசாங்கத்தின் பிரபல அமைச்சின் ஆலோசகராக பதவி வகிக்கும் 70 வயதுடைய கலாநிதி ஒருவரால் இளம் ஜப்பானிய மொழி ஆசிரியை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கொழும்பு பொது நூலகத்தில் விரிவுரை வழங்குவதற்காக முறைப்பாட்டாளரான ஆசிரியையை ஆலோசகர் அழைத்து வந்துள்ளார்.

அவர் கொழும்பு வந்ததையடுத்து விரிவுரை இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரது விரிவுரைகள் தொடர்பான கணினி விளக்கக்காட்சியில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய தன்னுடன் வருமாறு கூறி அமைச்சின் ஆலோசகர் வசிக்கும் மொரட்டுவையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த ஆசிரியை இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதில் இருந்து தப்பி ஒடி வந்தவர் தனது தந்தையுடன் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய அமைச்சின் ஆலோசகர் நேற்று பிற்பகல் மொரட்டுவ பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவ தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...