download 10 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையில் FM வானொலி அலைவரிசைகளை நிறுத்த அதிரடி தீர்மானம்!

Share

இலங்கையில் FM வானொலி அலைவரிசைகளை நிறுத்த அதிரடி தீர்மானம்!

இலங்கை வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

உலகிலுள்ள பல நாடுகளில் FM அலைவரிசைகளின் பயன்பாடு குறைவடைகின்ற நிலையிலேயே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு தாமரை கோபுரத்தின் ஊடாக வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு முதற்கட்டமாக வானொலி டிஜிட்டல் சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

FM அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு, வானொலி டிஜிட்டல் சேவை VHF அலைவரிசை ஊடாக ஒலிபரப்பப்படவுள்ளது.

டிஜிட்டல் வானொலி சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான முதலீட்டை, உள்நாட்டு முதலீட்டின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பயன்படுத்தப்படும் FM வானொலிகளை நவீனமயப்படுத்த மேம்பாட்டு நவீன கட்டமைப்பொன்று பொருத்தப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் FM அலைவரிசைகள் முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை 54 வானொலிகளுக்கு FM அலைவரிசைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

டிஜிட்டல் வானொலி சேவைக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கான அரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹேலசிரி ரணதுங்க தெரிவிக்கின்றார்.

டிஜிட்டல் வானொலியை ஆரம்பிப்பதற்கான வசதிகள் கொழும்பு தாமரை கோபுடத்தில் உள்ளமையினால், அந்த இடத்திலிருந்தே டிஜிட்டல் வானொலியை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

டிஜிட்டல் வானொலி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அலைவரிசைகளை வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹேலசிரி ரணதுங்க தெரிவிக்கின்றார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...

25 67c712a0b3ef1 md
உலகம்செய்திகள்

ரஷ்ய அச்சுறுத்தலைச் சமாளிக்க: ஜேர்மனியில் மீண்டும் கட்டாய இராணுவ சேவைச் சட்டம் நிறைவேற்றம்!

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அச்சுறுத்தலைச்...

MediaFile 3 2
இலங்கைசெய்திகள்

வாழைச்சேனைப் பகுதியில் தொலைபேசிக் கம்பம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன!

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில்...

22792944 tn7
இந்தியாசெய்திகள்

திருமணக் கொண்டாட்டத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது: 2 சிறுவர்கள் பலி!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில், சனிக்கிழமை இரவு...