accident
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொள்ளுப்பிட்டி விபத்து! – சாரதிக்கு மறியல்

Share

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் டுபாய் நோக்கி தப்பிச் சென்றிருந்த நிலையில், நேற்று (12) இரவு அந்நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கார் ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதி இடம்பெற்ற விபத்தின் பிரதான சந்தேகநபராவார்.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்திருந்தார்.

விபத்தின் போது, ​​அந்த காரின் பின்னால் பயணித்த பெண் ஒருவரை மூன்று பெண்கள் கொடூரமாக தாக்கியிருந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட கொள்ளுப்பிட்டி பொலிஸார் இரண்டு பெண்களை கைது செய்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...