உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! வெளியான குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாகனம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு!

Share

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் அதில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இவ் விபத்தில், ஜெ.ஜெயந்தன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றிக்கொண்டு , கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மிக வேகமாக பயணித்த கப் ரக வாகனம் முள்ளி சந்தி பகுதியில் திருப்ப முற்பட்ட வேளை ,வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.

அதன் போது வாகனத்தின் பின்னால் , மணலில் இருந்து பயணித்த குறித்த இளைஞன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

அதனை அடுத்து அவரை அங்கிருந்து மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...