FB IMG 1560341662019 750x375 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் கையை வெட்டினான்

Share

போதைப்பாக்குடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஆசிரியர்களிடம் மாட்டிய நிலையில், கையை பிளேட்டினால் வெட்டியுள்ளான்.

தெல்லிப்பழை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் போதைப் பாக்கினை உண்ட நிலையில், பாடசாலைக்கு சென்றுள்ளார். இவ்விடயத்தை அறிந்த ஆசிரியர்கள் மாணவனை விசாரித்து பாக்கினையும் மீட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபரினால் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்ட போது குறித்த மாணவன் கையை பிளேற்றால் வெட்டியுள்ளார். காயத்திற்கு உள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனுக்கு எவ்வாறு போதைப் பாக்கு கிடைத்தது என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....

கெஹெலிய
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதி!

இன்றைய தினம் காலை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக சென்றிருந்த நிலையில்...

மஹீல் சேனாரத்ன
இலங்கை

மஹீல் சேனாரத்ன பிணையில் விடுதலை!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை...