24 660b9df31a0bc
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இலங்கையர்

Share

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இலங்கையர்

அமெரிக்க பால்டிமோர் (Baltimore ) பால விபத்தில் சிக்கிய கப்பலில் உள்ள ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் இருப்பதாக பணியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கப்பல் குறித்த இடத்திலேயே உள்ள நிலையில் அதன் 21 பணியாளர்களும் கப்பலிலேயே இருக்கிறார்கள் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அவர்களுள் இருபது பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கப்பலை பராமரிப்பதிலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை மற்றும் அமெரிக்க கடலோர புலனாய்வாளர்களுடன் ஒத்துழைப்பதிலும் குறித்த இலங்கையர் மும்முரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பால்டிமோர் பாலப் பகுதியில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கான தற்காலிக, மாற்று வழியை அமெரிக்க கடலோர பொலிஸார் திறந்துள்ளனர்.

கடந்த வாரம் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆறு தொழிலாளர்கள் இந்த விபத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...