202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கோப்பாயில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Share

கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், பொலிசாரினால் 24 மணிநேர விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் கோப்பாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் ஆனந்தபுரப் பகுதியில் 25 வயதுடைய இளைஞன் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த போதைப்பொருளை பாவித்து வருவதாகவும் அதிலிருந்து விடுபட முடியாது உள்ளதாகவும் ஆனந்தபுரப் பகுதியிலேயே தான் போதைப்பொருளை காசு கொடுத்து பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...