202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கோப்பாயில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Share

கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், பொலிசாரினால் 24 மணிநேர விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் கோப்பாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் ஆனந்தபுரப் பகுதியில் 25 வயதுடைய இளைஞன் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த போதைப்பொருளை பாவித்து வருவதாகவும் அதிலிருந்து விடுபட முடியாது உள்ளதாகவும் ஆனந்தபுரப் பகுதியிலேயே தான் போதைப்பொருளை காசு கொடுத்து பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...