” அரசியல் உள்நோக்கத்துடன் அரங்கேற்றப்படும் கைது வேட்டையை உடன் நிறுத்தவும்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினை சந்திப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இன்று சென்றிருந்தார். அவரை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
” அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனக் கூறப்படும் நிலையில், கைதுகளும் தொடர்கின்றன. ஜோசப் ஸ்டாலின் வன்முறைகளில் ஈடுபட்ட நபர் கிடையாது. கைது சம்பவங்களின் பின்னணியில் அரசியல் உள்ளது. எனவே, கைது வேட்டை உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் சஜித் வலியுறுத்தினார்.
#SriLankaNews