500x300 1723264 delhi1 e1656910404646 1
இலங்கைசெய்திகள்

நாய் குரைத்ததால் உரிமையாளாரை இரும்புக்கம்பியால் தாக்கிய நபர்!

Share

இந்தியா – டெல்லி பஸ்சிம் விகார் பகுதியில் பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் குரைத்ததால் கோபமடைந்த நபர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குறித்த பகுதியைச் சேர்ந்த ராக்சித் என்பவரின் வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து குரைத்துள்ளது. நாய் குரைத்ததால் பயந்துபோன அந்த நபர், கோபத்தில் வளர்ப்பு நாயின் உரிமையாளரான ராக்சித்திடம் வந்து வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, நாயின் உரிமையாளரை பக்கத்து வீட்டுக்காரர் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார்.

இந்த தாக்குதலில் ராக்சித் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். அத்துடன் தன்னைப் பார்த்து குரைத்த நாயையும் அவர் விட்டுவைக்கவில்லை. இரும்பு கம்பியால் நாயையும் அடித்துள்ளார். அடிபட்ட நாய் சுருண்டு விழுந்துள்ளது.

இதுதொடர்பாக ராக்சித் கொடுத்த புகாரின் அடிப்படையில், பஸ்சிம் விகார் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#IndiaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...