35 2
இலங்கைசெய்திகள்

இலங்கை விமானப்படையில் இணையும் அமெரிக்காவின் அதிநவீன விமானம்

Share

இலங்கை விமானப்படையில் இணையும் அமெரிக்காவின் அதிநவீன விமானம்

இலங்கை விமானப்படைக்கு (SLAF) அமெரிக்காவினால் (US) அன்பளிப்பு செய்யப்பட்ட Beechcraft King Air 360ER விமானம் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்காளித் திறனைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இந்த அன்பளிப்பு வழங்கப்படுவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நவீன விமானம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் என்பவற்றை எதிர்த்துப் போராடுவதில் இலங்கையின் திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில் நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை கணிசமாக மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, 19 மில்லியன் டொலர் அமெரிக்க அரசாங்கத்தின் மானியத்தில் விமானம் மற்றும் ஆதரவு சேவைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, இவை அனைத்தும் இலங்கை விமானப்படைக்கு எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படுகின்றன.

Beechcraft King Air 360ER ஆனது இலங்கையின் கடற்பரப்பில் ரோந்து மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்க அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை விமானப்படை வீரர்கள் விமானத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முழுமையாக ஆயத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்காக மூன்று மாத பயிற்சி திட்டத்தை அமெரிக்க அரசு ஊழியர்கள் நடத்துவார்கள்.

இந்த விமானம் திருகோணமலை சீனக்குடாவில் உள்ள கடல்சார் ரோந்துப் படை 3 இல் இணைவதற்கு முன்னர் இரத்மலானை விமானப்படை தளத்தில் மேலதிக பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...