6 15
உலகம்செய்திகள்

அதிக விடுமுறை பெற்ற ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவான பைடன்

Share

அதிக விடுமுறை பெற்ற ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவான பைடன்

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் (Joe Biden) தனது 4 வருட பதவிக்காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர், 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களுக்கு சமனானது என கணிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவில் ஒரு அலுவலக ஊழியர் வருடத்திற்கு சராசரியாக 11 விடுமுறை நாட்களை எடுத்து கொள்ள முடியும்.

 

இருப்பினும், 81 வயதான பைடன், தனது 1326 நாட்கள் பதவிக்காலத்தில் இருந்து 532 நாட்களை விடுமுறைக்காக செலவளித்துள்ளார். இது அவரது பதவிக்காலத்தில் 40 வீதம் ஆகும்.

 

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாகவும், பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் நிலையிலும் ஜனாதிபதி இத்தனை நாட்கள் விடுமுறை எடுப்பது ஏற்கத்தக்கது என பைடனுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இந்நிலையில், அண்மையில் டெலவேரில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் ஓய்வு எடுத்துக்கொண்டமை அவர் எடுத்து கொண்ட 16ஆவது தொடர் விடுமுறை என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, அமெரிக்காவின் வரலாற்றில் மிகக்குறைந்த அளவில் பணியாற்றிய ஜனாதிபதி என்ற பெயரை பைடன் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 4
உலகம்செய்திகள்

இந்தியா -அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியாவும் அமெரிக்காவும் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், 2025...

Murder Recovered Recovered Recovered 5
இலங்கைசெய்திகள்

1000 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிப்பு: அமைச்சர் தகவல்

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துறைமுகங்களில் ஏற்பட்ட நெறிசல் காரணமாக இதற்கு முன்னர் 14 சந்தர்ப்பங்களில் சுமார்...

Murder Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம்! இந்த மாதம் முதல் புதிய தொகை

வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இந்த மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Murder Recovered Recovered Recovered 2
இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

நீர்கொழும்பு- துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உத்தரவை மீறிச் சென்ற...