sss
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி போடாமையால் 89 வீத மரணங்கள்!

Share

வவுனியாவில் தடுப்பூசி போடாமையால் 89 வீதமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களில் 89 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு அளவையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று பரவலடைந்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அதிகளவான கொரோனாத் தொற்று இறப்புக்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் இந்த மாதம் 15ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களில் 89.25 சதவீதமானவர்கள் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாதவர்களே எனவும் 10 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரம் செலுத்திக்கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள் எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...