24 661756f40ec85
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மரணங்கள்

Share

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மரணங்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் புற்று நோயினால் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை யாழ்ப்பாண மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் 776 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் குடல் புற்றுநோய் காரணமாக 88 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் இறந்துள்ளனர்.

இரைப்பைப் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர். ஈரல் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் இறந்துள்ளனர்.

சுவாசாப் புற்றுநோயால் 67 பேர் பாதிக்கப்பட நிலையில் 8 பேர் இறந்துள்ளனர். மார்பகப் புற்றுநோயால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் இறந்துள்ளனர்.

கருப்பைப் புற்றுநோயால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர். கருப்பைக் கழுத்துப் புற்றுநோயால் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர்.

மேலும் ஆண்களில் சிறுநீர்ப்பைப் புற்றுநோயால் 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குருதிப்பட்டி நோயால் 37 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆண்களில் முன்னாண் மற்றும் நரம்பியல் சார்ந்த புற்றுநேய்களால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தைரொய்டுப் புற்றுநோயால் 20 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என

யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை உரிய வகையில் மேற்கொள்ளும் போது குறித்த நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதோடு, ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை நாட வேண்டும் எனவும் யாழ்ப்பாண மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...