0b7b205f pearlonenews தாக்குதல் attack
இலங்கைசெய்திகள்

பாஷையூரில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! – 7 பேர் கைது

Share

வீடு ஒன்றுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பாஷையூர் அந்தோனியார் கோயில் அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றுள் புகுந்த குறித்த வன்முறைக்கும்பல் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் வீட்டாரையும் அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் , வாள், கம்பி மற்றும் கட்டை போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...