0b7b205f pearlonenews தாக்குதல் attack
இலங்கைசெய்திகள்

பாஷையூரில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! – 7 பேர் கைது

Share

வீடு ஒன்றுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பாஷையூர் அந்தோனியார் கோயில் அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றுள் புகுந்த குறித்த வன்முறைக்கும்பல் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் வீட்டாரையும் அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் , வாள், கம்பி மற்றும் கட்டை போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...