Vallai
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

64 மில்லியன் ரூபாய் நிதியில் வல்லைவெளியை அழகுபடுத்தும் செயற்றிட்டம்!

Share

யாழ்ப்பாணம் – வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம், இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

செழுமையான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கு எனும் தொனிப்பொருளுக்கமைய பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகளை, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்திருந்தார்.

Vallai 02

64 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வல்லைவெளிப்பகுதியில், வரவேற்பு வளைவு, நடைபாதை, இளைப்பாறும் பகுதிகள், வாகன தரிப்பிடங்கள், ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

மேலும் இயற்கை ரசனை மையங்கள், சிற்றுண்டி மையங்கள், கழிப்பறை வசதிகள், வல்லைச்சந்தி மேம்படுத்தல் என்பன இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளது.

Vallai 01

இன்றைய நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...