விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர்
இலங்கைசெய்திகள்

விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர்

Share

விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 இறக்குமதி கார்களை விடுவிப்பதாக கூறி மூவரிடம் 62 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த மோசடி சம்பவத்தில் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு குற்ற புலனாய்வு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (10.08.2023) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை, அலோபோமுல்ல, அருக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் பல பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வருபவர் எனவும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் இருப்பதாகவும் மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...