VideoCapture 20220813 101113
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பனைமர குற்றிகளுடன் 6 பேர் கைது

Share

அனுமதிப்பத்திரம் இன்றி கப் ரக வாகனத்தில் பனைமர குற்றிகளை ஏற்றிவந்த அறுவர் இன்று அதிகாலை, கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பனைமர குற்றிகளை ஏற்றிவரும்வேளை பொன்னாலை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகன சாரதி மாத்திரம் வாகனத்தில் வந்தநிலையில் ஏனையோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். எனவே வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மரங்களை கடத்திய குற்றச்சாட்டின் கீழும் ஏனைய ஐவர் சந்தேகத்தின்பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பனைமர குற்றிகளுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

VideoCapture 20220813 101247

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல் 8.00 மணி முதல்...

05 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை: சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவுப் பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று...

04 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் எரிபொருள் விலையில் அதிரடி உயர்வு: நள்ளிரவு முதல் புதிய விலை பட்டியல் அமுல்!

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின்...

03 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு வட்டியற்ற கடன்: தேசிய சேமிப்பு வங்கியும் இணைப்பு!

க.பொ.த (உயர்தரம்) தேர்வில் சித்தியடைந்தும், இடப்பற்றாக்குறை மற்றும் பொருளாதாரக் காரணங்களால் அரச பல்கலைக்கழகங்களில் நுழைய முடியாத...