யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் இன்று உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 72 வயது ஆண் ஒருவரும், கந்தர்மடத்தைச் சேர்ந்த 79 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அல்வாயைச் சேர்ந்த 75 வயது ஆண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைத் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரது விவரங்கள் கிடைக்கவில்லை.
இந்த உயிரிழப்புகள் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.
Leave a comment