download 8
இலங்கைசெய்திகள்

6 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்!

Share

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் எனவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டத்தை மேற்கோள்காட்டி ReliefWeb இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மனிதாபிமான தகவல் இணையத்தளமான ReliefWeb, இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு நெருக்கடி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, நாட்டில் சுமார் 5.3 மில்லியன் மக்கள் உணவைக் குறைத்து வருகின்றனர் அல்லது தவிர்க்கிறார்கள் மற்றும் குறைந்தது 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.

உயர் பணவீக்கம், வாழ்வாதார இழப்பு, உற்பத்தித்திறன் குறைதல் மற்றும் உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக நிலைமை மோசமடையக்கூடும் என்று ReliefWeb அறிக்கை கூறியுள்ளது.

வெளிநாட்டு உதவியின்மை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரிசி போன்ற முக்கிய உணவுகளின் அறுவடை வீழச்சி காரணமாக ஒக்டோபர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை நாட்டில் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...