24 6619e3d56b893
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு

Share

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு

வீடற்ற மக்களுக்கு 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி, காணி, வீடமைப்பு மற்றும் வர்த்தக உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை வலுவான பொருளாதாரத்தின் அங்கமாக மாற்றுவதற்கு அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோதர மற்றும் ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்புகளை கையளிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு காஜிமா தோட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக 2010ஆம் ஆண்டு ரந்திய உயன வீட்டுத் தொகுதியிலுள்ள 294 வீடுகள் ஜனாதிபதி தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக 12,855 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இலவச காணி அல்லது வீட்டு உரிமைகள் வழங்கப்படவில்லை.

இந்த வீடுகளில் மாதாந்த வாடகையாக 4,500 ரூபா அறவிடப்படாமல் மக்களுக்கு இலவச உரிமை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அத்துடன், தான் பிரதமராக இருந்த போது சீன அரசாங்கம் வழங்கிய 1,996 வீடுகள் அடுத்த இரண்டு வருடங்களில் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் மக்களை பொருளாதாரத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் உடைக்க முடியாத பரந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...