mahinda namal
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவிடம் 5 மணி நேரம் விசாரணை!

Share

மே – 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 5 மணிநேரம் இரகசியமாக வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த இடத்துக்கு நேற்று முன்தினம் (25) நேரில் சென்றே குற்றப் புலனாய்வு பிரிவினர், இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாதென வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் அலரிமாளிகையில் கடந்த 09 ஆம் திகதி கூட்டமொன்று நடைபெற்றது.

மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், அவர்களின் சகாக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்துக்கு வருகை தந்திருந்த, மொட்டு கட்சி உறுப்பினர்கள், கொள்ளுப்பிட்டிய (மைனாகோகம) மற்றும் காலி முகத்திடல் (கோத்தாகோகம) போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதன்பின்னர் நாடளாவிய ரீதியில் வன்முறை வெடித்தது.

இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களிடம் சிஐடியினர் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர். பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவிடம் 5 மணிநேரம், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தான் வன்முறையை ஆதரிப்பதில்லை எனவும், இவ்வாறு நடப்பது தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...