அரசியல்இலங்கைசெய்திகள்

48 மணிநேரம் இலங்கை இருளில்? – தீர்மானம் நாளை

pg01 Treasury.jpg 1 0000
Share

நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்துவது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளோம் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்கள் நாடு இருளில் இருக்க நேரிடும் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மின்துண்டிப்பை மேற்கொள்ளாது தொழில் சங்க நடவடிக்கையில் மட்டும் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

நாளை 3ஆம் திகதி நாங்கள் மாபெரும் போராட்டத்துக்கு தயாராகி உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வர்.

இதற்கான அவர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருகை தரவுள்ளனர்.

இந்த நிலையில் மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டால் அதனை சரி செய்ய எவரும் இருக்கமாட்டார்கள்.

இந்தப் போராட்டம் கெரவலப்பிட்டி, யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தக்கு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிடும் போது அரசு நிச்சயம் அதற்கு செவிசாய்க்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின் விநியோகத்தை நிறுத்தவதன் மூலம் பொதுமக்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்க நாம் விரும்பவில்லை.

எவ்வாறெனினும் தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாதுவிடின் மின் விநியோக நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...