வவுனியா மாவட்டத்தில் இம் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 45 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. வாரத்துக்கு ஒரு மரணம் என இருந்த காணப்பட்ட நிலையில் தற்போது கடந்த வாரத்தில் மற்றும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் ஏற்படும் மரண வீதத்தில் வவுனியாவில் மரணிப்போரின் தொகை பெருமளவில் காணப்படுகின்றது. வவுனியாவில் மக்களின் அசமந்தமான செயற்பாட்டாலேயே இவ்வாறு இறப்புக்களின் எண்ணிக்கை கட்டுக்கடக்காமல் அதிகரிக்கிறது என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.
மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதானது தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் புதிய கொரோனாக் கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.