மேலும் 40 லட்சம் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ள இந்தத் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
இவ் விடயம் தொடர்பில் நிபுணர் குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும் பாடசாலை மாணவர்களுக்கான இத் தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்படும்
விசேட தேவையுடைய மற்றும் நோயால் பீடிக்கப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நிலையில், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. – என்றார்.
Leave a comment