rtjy 234 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள்

Share

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள்

இலங்கையை விட்டு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் சாட்டுகளுக்காக நீதிமன்றத்தினால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள மூவரும், இலங்கை கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனையிட்ட குடிவரவு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வென்னப்புவ உதசிரிகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் 49 வயதான சுஜீவ பிரசன்ன பெர்னாண்டோ என்பவர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு இத்தாலிக்கு தப்பி செல்ல முயற்சித்த நிலையில் கைது செயயப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இத்தாலியில் வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு சிறிய விடுமுறைக்காக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

மேலும், மன்னார் சிலாவத்துறை நீதவான் நீதிமன்றம், நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினரால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த மூவர், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​குடிவரவு அதிகாரிகள் மற்றும் விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...