24 664ed6db29afe
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தேர்தலை இலக்குவைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் நகர்வு

Share

இலங்கையின் தேர்தலை இலக்குவைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் நகர்வு

இலங்கையின் தேர்தல் வெற்றியை மையப்படத்தி புனையப்படுகின்ற ஒருவிடயமாக இந்தியாவில் 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை தோற்றுவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.முஷாரப் குற்றம் சுமத்தியள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். அதேபோன்று இந்தியாவில் 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டம், இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் இடம்பெற்றுவரும் கால கட்டம்.

இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டாமாகும். அதனால் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி, புனையப்படுகின்ற ஒருவிடயமாக இது இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எழுகிறது.

இந்திய அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பாக இந்த சபையில் உறுப்பினர் ஒருவர் குறிப்பிடுகையில், முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் இருக்கிறது.

சில காலங்களுக்கு முன்னரும் இது தொடர்பாக சபையில் தெரிவித்திருந்தேன். அதன் பிரகாரம் தற்போது இந்தியாவில் 4முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனால் இலங்கையில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது என மிகவும் கடும் தொனியில் உரையாற்றி இருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் ஐ,எஸ்.ஐ.எஸ். இந்த தாக்குதலை நாங்கள்தான நடத்தினோம் என உரிமை கோரினார்கள். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு பல வருடங்கள் கடந்தும் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எந்த தொடர்பும் இல்லை என இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அனைத்து விசாரணை குழுக்களும் தெரிவித்துள்ளன.

இவ்வாறான பின்னணியில் ஏப்ரல் 21தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியது என்றும் இறந்துதிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் பக்தாதி தான் உயிருடன் இருக்கிறேன் என அறிவித்தார் என சொல்லப்பட்ட விடயங்களுக்கு பின்னால் தேசிய, சர்வதேச பெரும் சதி இருப்பதை எமது நாட்டு மக்கள் இப்போது புரிந்திருக்கின்ற சூழலில்தான், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களின் சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுடன் தொடர்புபடுத்தி, இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் மேலும் தலைதூக்கப்போகிறது என்ற போர்வையில் தற்போது சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அன்றும் இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்கள். தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலுக்கு இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு பல்வேறுபட்ட சம்பவங்கள் கருத்துக்கள் இருக்கின்ற நிலையில், புதிதாக வந்திருக்கும் இந்த செய்தி குறித்து நாட்டில் இருக்கின்றன சிங்கள,தமிழ்.முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். ” என்றார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...