24 664ee17b22482
இலங்கைசெய்திகள்

அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: வெளியான பின்னணி

Share

அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: வெளியான பின்னணி

இந்தியாவின் அஹமதாபாத்தில்(Ahmedabad) கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களில் இருவர், முறையே 38 மற்றும் 40 தடவைகளாக இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான், மொஹமட் ரஸ்தீன் மற்றும் மொஹமட் பாரிஸ் ஆகியோரே இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நுஸ்ரத் மற்றும் நஃப்ரான் ஆகியோரே இந்தியாவிற்கு “அடிக்கடி” பயணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய இருவரும் முதன்முறையாக இந்தியாவுக்கு சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

மே 20 அன்று கைது செய்யப்பட்ட இவர்கள் நால்வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, நுஸ்ரத் இதற்கு முன்னர் தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவராவார்.

அதே நேரத்தில் நஃப்ரான் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஸ்தீனுக்கு எதிராக குறைந்தது மூன்று போதைப்பொருள் வழக்குகள் உள்ளதாகவும், ஃபரிஸிக்கு எதிராக இலங்கையில் போதைப்பொருள் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நால்வரும், கிறிஸ்தவர்கள், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை இலக்குவைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்கும், பாகிஸ்தானில் இருந்து அவர்களை வழிநடத்திய அபுபக்கர் பக்தாதி காட்டிய வழியைப் பின்பற்றுவதற்கும் உடன்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...