202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுற்றிவளைப்பு நடவடிக்கை – 35 பேர் கைது

Share

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (15) நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் இன்று (16) அதிகாலை 1.00 மணி வரை சுமார் 30 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இரண்டு மணிநேரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த நடவடிக்கையில் கஞ்சா விற்பனையாளர்கள், பாவனையாளர்கள், திருடர்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் 18 பேர் சிக்கியதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த இரண்டு மணித்தியாலங்களுக்குள்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்களையும் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றில் ஆஜராகாத 7 சந்தேக நபர்களையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...