29 மாணவிகள் பாலியல் வன்புணர்வு! ஆசிரியர் மோசமான செயல்
இலங்கைசெய்திகள்

29 மாணவிகள் பாலியல் வன்புணர்வு! ஆசிரியர் மோசமான செயல்

Share

29 மாணவிகள் பாலியல் வன்புணர்வு! ஆசிரியர் மோசமான செயல்

29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான் எஸ்.அன்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நேற்று(31.07.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஓய்வு பெற்ற 61 வயதுடைய சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, ​​அவருக்காக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை.

இதற்கு முன்னர், நான்கு மாணவிகள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்ட விசாரணையின் போது, ​​அவர் 2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...