Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
இலங்கைசெய்திகள்

தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு 25 சதவீத வரி! – சட்டமூலம் நிறைவேற்றம்

Share

கடும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (07.04.2022) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருடாந்தம் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரேதடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது மிகைவரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டது. எதிரணிகள் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பில் இருந்து தமது கட்சி விலகி நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட முக்கிய நிதியங்கள் இதில் உள்ளக்கடப்படவில்லை. அதற்காகவே நாம் போராடினோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதன்பின்னர் குழுநிலையின்போது திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. திருத்தங்கள் சகிதம் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இன்றைய தினம் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படவில்லை. பிரிதொரு நாளில் நடத்தப்படவுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...