இலங்கைசெய்திகள்

220 மில்லியன் பெறுமதியான தங்கம் நூதன முறையில் கடத்தல்!

1632755606 ran 2ddd
Share

சுமார் 220 மில்லியன் பெறுமதியுடைய 16 கிலோ தங்கம் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பெரும் தங்க கடத்தல் போலியான வர்த்தக பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகன பாகங்கள் மற்றும் மின் இயந்திரங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என தெரிவித்து குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பொருள்களின் உட்புற தொழில்நுட்ப பாகங்கள் தங்கத்தால் தயாரிக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டுபாயிலிருந்து வாகன பாகங்கள் மற்றும் மின் இயந்திரங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என கூறி 16 கிலோ தங்கம் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளன என எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தங்கத்தின் சந்தை மதிப்பு 220 மில்லியன் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...