Wijeyadasa Rajapakshe
அரசியல்இலங்கைசெய்திகள்

21வது திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று! – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

Share

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் இன்று அரசுக்கு அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை கட்சி நியமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

21வது திருத்தம் தொடர்பான மூன்று பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஏனைய இரண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்மொழியப்பட்ட திருத்தச் சட்ட வரைவை பெற்றுக்கொண்டதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக சட்டத்தரணிகள் குழு நியமிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வரைவு தொடர்பாக சில கவலைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். 19வது திருத்தத்தில் உள்ள விதிகளை விட ஜனநாயக அடிப்படைகளை வலுப்படுத்தும் முன்மொழிவுகளை அரசியலமைப்பு திருத்தம் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ம்’ என்ற கோஷத்துடனான இப்போராட்டம், நாளை 50 ஆவது நாளில் கால்பதிக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...