இலங்கைசெய்திகள்

முன்னாள் தமிழ் எம்.பிக்கு 140 பாதுகாவலர்களை வழங்கிய ரணில்

Share
19
Share

முன்னாள் தமிழ் எம்.பிக்கு 140 பாதுகாவலர்களை வழங்கிய ரணில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கதிர்காமருக்கு, 140 பாதுகாவலர்கள் மற்றும் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றையும், முன்னதாக ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு கருதி வழங்கியிருந்நதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

வரலாறு பூராகவும் இருந்த அரச தலைவர்களில் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் பலரும் கதைத்து வருகின்றனர்.

இவ்வாறு இருந்தாலும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த நாட்டில் 30 வருடமாக இருந்து வந்த பங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இறுதியாக தலைமைத்துவம் வழங்கிய ஒருவர்.

அவரை வெறுக்கக்கூடிய நபர்கள் இன்னும் இருக்கலாம். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம்.

அதனால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் இதனைவிட புத்திசாதூரியமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.”

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...