18
உலகம்செய்திகள்

போர் நிறுத்த நடவடிக்கையின் அடுத்த நகர்வு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Share

போர் நிறுத்த நடவடிக்கையின் அடுத்த நகர்வு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போர் நிறுத்த நடவடிக்கையின், அடுத்த நகர்வாக பாலஸ்தீனக் குழு இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 90 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக மூன்று இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அவர்களை (1) விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸின் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா டெலிகிராம் மூலம் வெளியிட்ட அறிக்கையின்படி,

ஓஃபர் கால்டரோன்(Ofer Kalderon), கீத் சாமுவேல் சீகல்(Keith Samuel Siegel) மற்றும் யார்டென் பிபாஸ்(Yarden Bibas) ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளனர்.

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் வைக்கப்பட்டிருந்த மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் ஐந்து தாய்லாந்து நாட்டினர் உட்பட 8 பிணைக் கைதிகள் நேற்றுமுன்தினம்(30) விடுவிக்கப்பட்டனர்.

பிணைக் கைதிகள் பரிமாற்ற நிகழ்வின் போது குழப்பகரமானதாக இருந்தது என்றும், கூட்டத்தினர் சில பகுதிகளை முற்றுகையிட்டதால், இஸ்ரேல் பதிலுக்கு 110 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது என்றும் கூறப்படுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆறு வார காலப்பகுதியில் மொத்தம் 33 பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதே நேரத்தில் இஸ்ரேல் 737 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமையன்று விடுவிக்கப்படவுள்ள மூன்று பணயக் கைதிகளும் ஒக்டோபர் 7, 2023 அன்று நடந்த தாக்குதல்களில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் அடங்குவர். 35 வயதான யார்டென் பிபாஸ், அவரது மனைவி ஷிரி பாபாஸ் மற்றும் அவர்களது இரண்டு இளம் குழந்தைகள் ஆகியோருடன் கடத்தப்பட்டார்.

இந்நிலையில் தற்போது யார்டென் மட்டுமே அவரது குடும்பத்தில் உயிருடன் உள்ளார்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...