10 58
இலங்கைசெய்திகள்

உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து

Share

உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து

வவுனியாவில் (Vavuniya) தொடருந்து மோதியதில் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து வவுனியா – அவுசதப்பிட்டிய பகுதியில் இன்று (31.01.2025) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து இன்று (31.01) காலை 9 மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...