இலங்கை
சிறீதரன் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்ததா – சபையில் கேள்வி எழுப்பிய எம்.பி

சிறீதரன் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்ததா – சபையில் கேள்வி எழுப்பிய எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem ) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21.1.2025) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் நானும் அங்கு இருந்தேன்.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவருக்கு எதிராக பயணத்தடை உள்ளதாக கூறினர்.
அதனை தொடர்ந்து கலந்துரையாடி நாம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தோம். இத்தகைய விடயங்கள் காணப்படின் நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம்.
ஆனால் அதிகாரிகள் அவருடைய நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ளனர். அரசாங்கம் இன்னமும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இந்த விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem ) தெரிவித்துள்ளார்.