6 46
இலங்கைசெய்திகள்

எந்த நேரத்திலும் வெளியேற தயார் : மகிந்த அறிவிப்பு

Share

எந்த நேரத்திலும் வெளியேற தயார் : மகிந்த அறிவிப்பு

கொழும்பு விஜேராம மாவத்தையில் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும், ஒரு கணம் கூட அங்கு தங்குத் தயாராக இல்லை என்றும் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake), உத்தியோகபூர்வ இல்லத்தில் மகிந்த ராஜபக்ச தொடர்ந்து வசித்தால், மாத வாடகையாக 4.6 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கூறியது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று கேட்டவேளை பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு எழுத்துபூர்வமாக இன்னும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், அது கிடைத்தவுடன் காலி செய்வதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியாக அரசாங்கத்திடமிருந்து பெற்ற அனைத்தையும் திரும்பப் பெற்றாலும், மகிந்த ராஜபக்ச ஒரு புலம்பல் செய்பவர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அரச தலைவருக்கு பொருத்தமான வீடு வாடகை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது என்றும், அதன்படி, தான் இந்த அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கிறார் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

இது தொடர்பாக ஜனாதிபதி எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றாலும், இதன்மூலம் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான ஜனாதிபதி அநுரவின் பகிரங்க அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna rantunga), நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...