Connect with us

இலங்கை

இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published

on

14 24

இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்றையதினம் (12) கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி (Kilinochi) மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்பபடுத்தினர்.

இதன்போது குறித்த எட்டு இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 கடற்றொழிலாளர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்(M. K . Stalin) கடிதம் எழுதியுள்ளார்.

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் இன்று(12) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்தே மு.க ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் கடற்றொழில் மேற்கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதாக இன்று(12) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து கடற்றொழிலாளர்களையும் அவர்களது கடற்றொழில் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலுவான மற்றும் பயனுள்ள இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.

தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது.

இலங்கை கடற்படையினரால் கடற்றொழிலாளர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது, கடற்றொழிலாளர் சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு உரிய இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்”என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்18 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.02.2025, குரோதி வருடம் தை மாதம் 29, செவ்வாய்க் கிழமை,...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.02.2025 குரோதி வருடம் தை மாதம் 28, திங்கட் கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.02.2025, குரோதி வருடம் தை மாதம் 27 ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 07 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.02. 2025, குரோதி வருடம் தை மாதம் 25 வெள்ளிக் கிழமை, சந்திரன் ரி ஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சுவாதி, விசாகம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 05 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 5.02.2025, குரோதி வருடம் தை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் அஸ்தம், சித்திரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 04 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 04.02.2025, குரோதி வருடம் தை மாதம் 22, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள பூரம், உத்திரம் சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 03 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.02.2025 குரோதி வருடம் தை மாதம் 21, திங்கட் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த மகம், பூரம்...