19 10
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

Share

அநுர அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

புதிய அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 16 இன் விதிகளின்படி, நாளை (14) சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படவுள்ளது.

இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன 10.02.2025 அன்று வெளியிட்ட விசேட வர்த்தமானி எண். 2423/04 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...