8 56
இலங்கைசெய்திகள்

சாலையில் வெடிகுண்டுகளை புதைக்கும் ஹமாஸ்: IDF வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

Share

சாலையில் வெடிகுண்டுகளை புதைக்கும் ஹமாஸ்: IDF வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

வடக்கு காசா பகுதியில் சாலையோரம் ஹமாஸ் செயற்பாட்டாளர்கள் வெடிகுண்டுகளை புதைத்து வைக்கும் காட்சிகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) வெளியிட்டுள்ளது.

ஜபாலியாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையில் இருந்து வெறும் 45 மீட்டர் தொலைவில் குறித்த குண்டுகள் வைக்கப்படுவதாக (IDF) தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய மருத்துவமனையில் கடந்த வாரம் இராணுவ சுற்றிவளைப்புக்களின் போது, ​​மருத்துவ மையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பல ஹமாஸ் செயற்பாட்டாளர்களை துருப்புக்கள் கொன்றதாக IDF கூறுகிறது.

அத்தோடு, டசின் கணக்கான ஹமாஸ் செயல்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் அப்பகுதியில் புதைக்கப்பட்ட பல வெடிபொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காசாவில் IDF ஆல் கண்டுபிடிக்கப்பட்ட ஹமாஸ் செயற்பாட்டாளர்களால் எடுக்கப்பட்ட காணொளியானது, அருகில் வெடிபொருட்களை புதைத்து வைப்பதைக் காட்டுகிறது.

ஹமாஸ் அமைப்பு காசா பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சிவில் நிறுவனங்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில் முறையில் பயன்படுத்தியதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என்று IDF மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...