15 12
இலங்கைசெய்திகள்

அநுர குமாரவின் இந்திய விஜயம்! சாதகமான செய்திகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

Share

அநுர குமாரவின் இந்திய விஜயம்! சாதகமான செய்திகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு பல சாதகமான செய்திகள் கிடைக்கும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணமாகவுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் குறித்த பயணம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ஒரு நாடாக, இலங்கைக்கு மிகவும் வலுவான வெளிநாட்டு உறவுகள் தேவை, மேலும் மிகவும் வலுவான இராஜதந்திர சேவையும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், தமது அரசாங்கம் மிகவும் வலுவான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில், ஒரு நாடாக, இலங்கையிடம் இதே போன்ற விடயம் இருக்கவில்லை, பெரும்பாலான ஆட்சியாளர்கள் வெளிநாட்டு இராஜதந்திர சேவையையும் அதே போல் தேசம் சார்ந்ததாகவோ அல்லது நாட்டை நோக்கியதாகவோ கருதப்பட்ட வெளியுறவுக் கொள்கையையே கொண்டிருந்தனர்.

இந்தியா மிக நெருக்கமான அண்டை நாடாகவும், மிகவும் வலுவான அண்டை நாடாகவும், நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு எந்த நிபந்தனையுமின்றி உதவிய நாடாக இருப்பதால், இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண வேண்டும். மேலும், இலங்கை மிகவும் வலுவான, அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், மிகவும் வலுவான நாடாக இருப்பதால், அவர்கள் அதில் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாவுக்கானதாகும். இதன்போது கையெழுத்திட வேண்டிய பல ஒப்பந்தங்கள் நிலுவையில் உள்ளன. இன்னும் பல ஒப்பந்தங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு எல்லாவற்றையும் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது.

எனினும் ஜனாதிபதியின் இந்தியப் பயணத்திற்குப் பிறகு நாட்டுக்கு பல சாதகமான செய்திகள் கிடைக்கும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...