2 14
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப்பின்னர் வெடிக்கப்போகும் போராட்டம் : ரணில் எச்சரிக்கை

Share

எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப்பின்னர் வெடிக்கப்போகும் போராட்டம் : ரணில் எச்சரிக்கை

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று (9) தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் சேறு பூசி தாம் எழுப்பும் உண்மையான பொருளாதார பிரச்சினைகளை மறைக்க முயல வேண்டாம் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு எதிர்காலம் வேண்டுமெனில் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களித்து அனுபவம் வாய்ந்த அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு கோருவதாக தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் புதிய நாடாளுமன்றத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம்.தனது கொள்கை என்ன என்பதை ஜனாதிபதி நாட்டுக்கு தெரிவிக்கவேண்டிய கடமை உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்ன்னர் சர்வதேச நாணய நிதியத்துடனான(imf) உடன்படிக்கையை திசைகாட்டி நிராகரித்தது.ஆனால் தற்போது அந்த உடன்படிக்கையை செயற்படுத்துவது குறித்து ஐ எம் எவ் உடன் கலந்துரையாடி வருகிறது.

இந்த உடன்படிக்கையில் ஏதாவது திருத்தம் உள்ளதா என்பது எமக்கு தெரியாது. எனவே ஐஎம் எவ் உடனான உடன்படிக்கை,அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

Share
தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...

death body
இலங்கை

வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல யாரும் முன்வராத பரிதாபம் – விபத்தில் உயிரிழந்த முதியவர்.

நேற்றைய தினம் இரவு காரைநகரில் இடம்பெற்ற விபத்தில், காரைநகர் – கருங்காலி பகுதியை சேர்ந்த 66...

ஹர்ஷன நாணயக்கார
இலங்கை

மஹர சிறைச்சாலை கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா?

சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியாக, மஹர சிறைச்சாலை கலவரம் இடம்பெற்றிருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளதாக...