3 49
இலங்கைசெய்திகள்

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக யாழ் வீராங்கனை

Share

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக யாழ் வீராங்கனை

இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக செயற்பட தயாராக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி (Tharjini Sivalingam) தெரிவித்துள்ளார்.

 

இதற்காக தம்மிடம் ஏற்கனவே உள்ள நிலை 01 சான்றிதழுக்கு அப்பால், விரைவில் நிலை 02 மற்றும் நிலை 03 பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண மற்றும் ஐந்து ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த கேப் டவுன் உலகக் கிண்ணத்துக்கு பிறகு தேசிய அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

 

அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் தர்ஜினி தனது இந்திய கணவர் ஆர்.பிரசாத்துடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நிலை வலைப்பந்தாட்டப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் பார்வையாளராக பங்கேற்றார்.

 

இந்தநிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி, இலங்கை அணியிலிருந்து நழுவியது துரதிர்ஸ்டவசமானது, இந்த பின்னடைவுக்கு அணி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இலங்கை அணிக்கு உள்நாட்டு அளவில் போதுமான அனுபவம் இருந்த போதிலும், வெளிநாட்டுக்களங்களில் வீராங்கனைகளுக்கு உரிய அனுபவம் இல்லை என்றும் தர்ஜினி குறிப்பிட்டுள்ளார்.

 

இருப்பினும், அவர்கள் முன்கூட்டியே போதுமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால், அந்த அணிக்கு சர்வதேச அனுபவமும் உள்ளது என்று தர்ஜினி கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 21
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகுதி சர்ச்சை: ‘அவதூறுகளுக்கு நுகேகொடப் பேரணியில் பதிலளிப்பேன்’ – நிராகரிப்பு!

தனது கல்வித் தகுதிகள் குறித்துப் பரவி வரும் கூற்றுக்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய...

images 11 2
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை விஹாரை கட்டுமானம்: ற்போதைய நிலையைத் தொடர நீதவான் உத்தரவு!

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிகக் கட்டிடத்தின் தற்போதைய...

23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...