15 21
இலங்கைசெய்திகள்

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு

Share

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 925 வரையில் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு தகவல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம் என்பனவற்றுக்கு இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்போது, சொத்துக்கள் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விதி மீறல்கள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...