3 28
இலங்கைசெய்திகள்

பல பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை: சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

Share

பல பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை: சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வரி இலக்குகளை நோக்கி இலங்கை படிப்படியாக நகர்ந்து வருவதாக ஜனாதிபதி அலுவலக அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரண்டா தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,121 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

மேற்படி காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1025 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் 815 பில்லியன் ரூபாவும், மதுவரி திணைக்களம் 115 பில்லியன் ரூபாவும், ஏனைய நிறுவனங்களில் இருந்து 165 பில்லியன் ரூபாவும் வரிகளாக வசூலிக்கப்பட்டுள்ளன.

வரி வருவாய் இலக்குகளுக்குள் இலங்கை தொடர்ந்தும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய வங்குரோத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக முன்னேறியுள்ளமைக்கு சர்வதேச நாணய நிதியம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

மேற்படி காலப்பகுதியில் அரசாங்கத்தினால் மதிப்பிடப்பட்ட வரி வருமானம் 2,005 பில்லியன் ரூபாவாகும். இந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் 4,127 பில்லியன் ரூபாவாகும்.

இதில் 2,024 பில்லியன் ரூபா உள்நாட்டு இறைவரித் திணைக்களமும், 1,533 பில்லியன் ரூபா சுங்கமும், 232 பில்லியன் ரூபா மதுவரி திணைக்களமும் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...