10 15
இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பான அறிவிப்பு

Share

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை காலை 9 மணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை நாளை காலை 11.00 மணி முதல் 11.30 வரை தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

ஆட்சேபனைக்கான நேரம் நிறைவடைந்ததன் பின்னர் கட்சிகள் மற்றும் சுயாதீன வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் மொத்தமாக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Share
தொடர்புடையது
3 13
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி – கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல்வாதி

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு தலைமை நீதவான்...

5 13
இலங்கைஉலகம்செய்திகள்

அநுர குமாரவின் திட்டத்தை ஆதரிக்கும் வோல்கர் டர்க்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அநுர குமார திசாநாயக்கவும்,...

4 14
இலங்கைசெய்திகள்

காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

காணி நிர்ணய சட்டம் பிரிவு 4இற்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25...

2 15
இலங்கைசெய்திகள்

கண்டியில் சண்டித்தனம் செய்த ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்!

கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கண்டி மருத்துவமனை வளாகத்தில் அடாவடியாக...