இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பான அறிவிப்பு

10 15
Share

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை காலை 9 மணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை நாளை காலை 11.00 மணி முதல் 11.30 வரை தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

ஆட்சேபனைக்கான நேரம் நிறைவடைந்ததன் பின்னர் கட்சிகள் மற்றும் சுயாதீன வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் மொத்தமாக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...