world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

Share

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை ‘ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை’ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான விபரங்களைச் சபையின் ஒருங்கிணைப்பாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற்துறை முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி தி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் யாழ். நல்லூரில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலின்போது, தற்போதைய அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்படவுள்ள ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பானது தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளை முற்றாக நிராகரிப்பதாக அமைந்துள்ளதெனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு தீர்வையும் நிராகரிப்பதென்றும், 1985 திம்புக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய வரைபை உருவாக்குவதென்றும் ஏகமனதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுப்பதற்காகத் துறைசார் நிபுணர்கள், குடிசார் அமைப்புகள் மற்றும் சமயத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பிரதானமாக இரண்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளது:

தமிழர் தேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் இடையில் இறைமையை அங்கீகரித்த அடிப்படையிலான ஒரு புதிய சமூக ஒப்பந்த வரைபைத் தயாரித்தல்.

தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய விரிவான கூட்டாட்சி முறைமைக்கான தீர்வுத்திட்ட வரைபை உருவாக்குதல்.

இந்தத் தீர்வுத்திட்ட வரைபு தயாரிப்பின்போது 2016-இல் தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டம் மற்றும் சர்வதேச கூட்டாட்சி முறைமைகள் போன்றன கருத்தில் கொள்ளப்படும். முதற்கட்டமாகத் தயாரிக்கப்படும் உத்தேச அறிக்கை, வடக்கு–கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்காக வெளியிடப்படும். அனைவரதும் பரிந்துரைகளை உள்ளடக்கிய இந்த இறுதித் தீர்வுத்திட்ட வரைபு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...