12 8
இலங்கைசெய்திகள்

விரைவில் ஆரம்பமாகும் கட்டுநாயக்க விமான நிலைய ஜப்பானின் நிர்மாண செயற்திட்டம்

Share

விரைவில் ஆரம்பமாகும் கட்டுநாயக்க விமான நிலைய ஜப்பானின் நிர்மாண செயற்திட்டம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாவது முனைய நிர்மாணப் பணிகள், ஒரு வருட கால தாமதத்தின் பின்னர், ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச முகவரகத்தின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய இரண்டாவது முனையத்தின் கட்டுமானம், ஜெய்க்காவின், 145 பில்லியன் ரூபாய் மென் கடன் திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக 2022 ஆம் ஆண்டில் இருந்து அந்த திட்டம் ஸ்தம்பித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு முடிவடையும் வரை இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விரைவில் ஆரம்பிக்கப்படும் விமான நிலையத் தரைத்தள மேம்படுத்தல் திட்டம், எதிர்வரும் நவம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்காக, ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம், 564 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.

எனினும், பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டில், அந்த நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...