18 4
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இந்திய அணி : அணிகளின் விபரங்கள்

Share

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இந்திய அணி : அணிகளின் விபரங்கள்

இலங்கையில் இந்த மாத இறுதியில் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் விபரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்திய அணியில் இடம்பெறவில்லை.

எனவே, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடவேண்டும் என்று புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆர்வம் கொண்டுள்ளார்.

முன்னதாக குறித்த மூவருக்கும் இலங்கை சுற்றுலாவில் ஓய்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாண்டியாவின் பயணத்தவிர்ப்பை அடுத்து, புதிய யோசனையை கம்பீர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை, 20க்கு 20 போட்டிகளில் இருந்து ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஓய்வுப் பெற்றுள்ளமையால், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியக்குமார் யாதவ் இலங்கைக்கு எதிரான 20க்கு 20 போட்டிகளுக்கு தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...